காமன்வெல்த் பதக்கங்களை குத்தகைக்கு எடுத்த இந்தியப் பளுதூக்கும் வீரர்கள்!
காமன்வெல்த் போட்டிகளில் தொடர் பதக்க வேட்டையில் அசத்தி வருகின்றனர் இந்திய பளுதூக்கும் வீரர்கள்.
ஆஸ்திரேலியாவின் கராரா ஸ்டேடியத்தில் 21-ம் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகள் தொடங்கிய முதல் நாளிலேயே பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சனு தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தையே தங்கப்பதக்கமாகப் பெற்றுத் தந்து வேட்டையை துவக்கி வைத்தார்.
இதையடுத்து, அதே போட்டியில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வெல்ல, 53 கிலோ பிரிவிலான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சனு மீண்டும் தங்கப்பதக்கம் வென்று இந்திய பளுதூக்கும் வீரர்களின் பதக்க வேட்டைக்கான அஸ்திவாரத்தை திடமாக அமைத்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவின் பூனம் 222கிலோ எடைபிரிவில் பளுதூக்குதலில் தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா ஐந்து தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் ஏழு பதக்கங்களைப் பெற்ற இந்திய அணிக்கு அத்தனைப் பதக்கங்களையும் பளுதூக்கும் பிரிவே பெற்றுத்தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading காமன்வெல்த் பதக்கங்களை குத்தகைக்கு எடுத்த இந்தியப் பளுதூக்கும் வீரர்கள்! Originally posted on The Subeditor Tamil
More Sports News