இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடி கைது காரணம் என்ன?

மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று இரவு முதல் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த 5 பயணிகளுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று இரவு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஒரு நடத்திர கிளப்பில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், இதில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கலந்து கொள்வதாகவும் மும்பை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் தகவல் உண்மை எனத் தெரிய வந்தது. போலீசார் அந்த கிளப்புக்குள் சென்று நடத்திய சோதனையில் அங்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரபல இந்தி பாடகர் குரு ரன்தாவா, பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ருத்விக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசெய்ன் கான் உள்பட ஏராளமானோர் அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேரையும், 7 கிளப் ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரெய்னா உட்பட அனைவரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds

READ MORE ABOUT :