நான் ஏமாற்றத்தில் இருக்கிறேன் ஆனால் என்னுடைய நேரம் வரும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறுகிறார்

'ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காததால் நான் ஏமாற்றத்தில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய நேரம் கண்டிப்பாக வரும்' என்று கூறுகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.'சைனா மேன் பவுலர்' என்று அழைக்கப்படுபவர் குல்தீப் யாதவ். 26 வயதான இவரது பந்துவீச்சை எளிதில் கணிக்க முடியாது. பந்து எப்போது, எந்த திசையில், எப்படி திரும்பும் என பேட்ஸ்மேனால் எதிர்பார்க்கவே முடியாது. குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தான் குல்தீப் யாதவின் பந்துவீச்சைக் கண்டு மிரளுவார்கள்.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது குல்தீப் யாதவும் அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டி உள்பட எந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் காயமடைந்து வெளியேறிய போது கடைசி டெஸ்ட் போட்டியிலாவது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கருதினர். ஆனால் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தருக்குத் தான் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலிய தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்த குல்தீப் யாதவ், தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் நான் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறேன்.

ஆனாலும் தற்போதைய சூழ்நிலை எனக்கு சாதகமாக இல்லை. பார்டர்- கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விளையாட வாய்ப்பு கிடைக்காது எனக்கு ஏமாற்றமாக இருக்கின்ற போதிலும், நம்முடைய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனாலும் என்னால் நன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் என்னுடைய நேரம் கண்டிப்பாக வரும் என நான் கருதுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக விளையாடி உள்ளேன் என்று கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds

READ MORE ABOUT :