”நான் ஓய்வு பெறப் போகிறேன்”- சோயப் மாலிக் அறிவிப்பு

by Rahini A, May 10, 2018, 15:23 PM IST

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை உடன் கிரிக்கெட் வாழ்விலிருந்து விடைபெற உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரராக பல போட்டிகளில் ஆல்-ரவுண்டராக அசத்தியவர் சோயப் மாலிக். இவர் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவர். விரைவில் தங்கள் குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இத்தம்பதியினர்.

இந்நிலையில், ”2019-ம் ஆண்டு உலகக்கோப்பை உடன் 50 ஓவர் போட்டிகளிலிருந்து விடைபெற முடிவு செய்துள்ளேன். அதன் பிறகு 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்குபெற வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம்” எனக் கூறியுள்ளார்.

விரைவில் ஐபிஎல் போன்ற கரீபியன் லீக் தொடரில் விளையாட உள்ளார் சோயப் மாலிக். கரீபியன் தொஅரில் ’கயானா அமேசான் வாரியர்ஸ்’ அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் சோயப்.

இப்போட்டித் தொடர் நிறைவடைந்த பின்னர் உலகக்கோப்பைக்குத் தயாராவேன் என்றும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக் குறிக்கோள்களை வெளிப்படுத்தியுள்ளார் சோயப் மாலிக்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ”நான் ஓய்வு பெறப் போகிறேன்”- சோயப் மாலிக் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை