இன்னமும் டாஸ் போட்டுத்தான் விளையாட வேண்டுமா?-டெஸ்ட் சீர்திருத்தம்

by Rahini A, May 18, 2018, 15:40 PM IST

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மறுசீரமைப்பது தொடர்பான யோசனையில் உள்ளது ஐசிசி.

சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பான ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை மெருகேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல கட்ட முயற்சிகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் காயின் டாஸ் செய்துதான் இனிமேலும் விளையாட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக உலகளாவிய கிரிக்கெட் சங்கங்களுடன் இணைந்து காயின் டாஸ் திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிசி முடிவு செய்துள்ளது. வருகிற மே 27 மற்றும் 28-ம் தேதிகளில் மும்பையில் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தின் தான் காசு சுண்டிவிட்டு டாஸ் போட்டுப்பார்க்கும் முறையை இனிமேலும் டெஸ்ட் தொடர்களில் நடைமுறையில் வைத்திருக்கலாமா இல்லையா என்பது குறித்தான முடிவு எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இன்னமும் டாஸ் போட்டுத்தான் விளையாட வேண்டுமா?-டெஸ்ட் சீர்திருத்தம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை