லோக்சபா தேர்தல் பிரசாரம்: சென்னை வருகை தந்தார் ராகுல் காந்தி
Rahul Gandhi visits Chennai
லோக்சபா தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை தந்தார்.
சென்னை வந்துள்ள ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்ல இருக்கிறார் ராகுல். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்தடைகிறார்.
நாகர்கோவிலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் திருவந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார் ராகுல்.
You'r reading லோக்சபா தேர்தல் பிரசாரம்: சென்னை வருகை தந்தார் ராகுல் காந்தி Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :