பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம் 9.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்

SSLC exam starts today

Mar 14, 2019, 08:18 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

நடப்பு 2018-19-ம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம், 12 ஆயிரத்து 546 பள்ளிகளை சேர்ந்த, 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ மாணவியர்; தனித்தேர்வர்கள், 38 ஆயிரத்து 176 பேர் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதுகின்றனர்.

நடப்பு ஆண்டில் இருந்து மொழிப்பாட தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் மதியம் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது. மற்ற பாடங்களுக்கான தேர்வுகள், வழக்கம் போல் காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுத்தேர்வுக்காக, மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைக்கைதிகள் 4 சிறை மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகளை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில், வரும் 29-ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

You'r reading பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம் 9.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை