அரசியலில் இணைவார்களா? - ஒரே பதிலை அளித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்
அரசியலில் வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளனர்.
அரசியலில் வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளனர்.
இது குறித்து, சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த், “தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டியுள்ளது. கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும்.
”உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றார். மேலும், 2.0 படத்துக்கு கிராபிக்ஸ் பணிகள் நடப்பதால் முதலில் வருவது காலாவா? 2.0 வா? என்பது இரண்டு நாளில் தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் தொடர், “ரஜினியும் நானும் இணைவோமா? என்ற இந்த கேள்வி, எங்கள் இருவரையும் சேர்த்தே துரத்துகிறது. உண்மையில் இதற்கு காலம்தான் பதில் சொல்லும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இருவரும் காலம் தான் பதில் சொல்லும் என்ற ஒரே மாதிரி பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You'r reading அரசியலில் இணைவார்களா? - ஒரே பதிலை அளித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News