தமிழை புறக்கணித்ததால் ரத்தான தபால் துறை தேர்வு செப் 15-ல் நடைபெறுகிறது

தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்காக கடந்த மாதம் தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்பு முடித்தவர்களை தகுதியாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

தமிழகத்தில், தமிழில் தேர்வு எழுத அனுமதி இல்லையா? என்று அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்வை கடுமையாக எதிர்த்தன. நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை தமிழக எம்பிக்கள் ஒட்டு மொத்தமாக கிளப்பினர்.

இந்த கடும் எதிர்ப்பைக் கண்டு பின் வாங்கியது மத்திய அரசு . இதனால், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அத்துடன் இனிமேல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்று ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வுகள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்களுடன் வைகோ சந்திப்பு ஏன்? கூட்டணிகள் மாற்றமா?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds