மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு!

by Suresh, Feb 20, 2018, 20:02 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு தூத்துக்குடியில் 17-ஆம் தேதி தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று அக்கட்சியின், தமிழ் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

1970-ஆம் ஆண்டு முதல் கட்சியில் பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். 2011-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டு வரை சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தற்போது மாநிலச் செயலாளராக இருக்கும் ஜி.ராமகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி அந்தப் பதவிக்கு கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், என். சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த மாநாட்டில், 80 பேர் கொண்ட மாநிலக்குழுவுக்கு 79 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை