குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழினத் துரோகம்.. கமல்ஹாசன் விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை பிரிக்கிறது. பாகிஸ்தான் இந்துக்களுக்கு ஒரு நியாயம், இலங்கை இந்துக்களுக்கு ஒரு நியாயமா?
கிராமங்களில் விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த தற்கொலைகளை தடுப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்காமல், மத ரீதியாக மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது. மக்கள் எதிர்த்து போராடினால் குரலை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்காமல் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அவசரமாக கொண்டு வருவது ஏன்? கேள்வி கேட்கும் குரலை நெரிப்பது என்பது அரசு பயங்கரவாதம். மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீது விழுந்த அடியாகும். ஜனநாயகத்தை நாம் காத்திட வேண்டும். மக்களுக்கு எதிரான தனிநாயகத்தை ஒழிக்கும் வரை நான் ஓய மாட்டேன்.

தேசவிரோத சக்திகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. சர்வாதிகாரத்திற்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கிதான் எழ வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பது தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் செய்த துரோகம்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :