குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம்..

by எஸ். எம். கணபதி, Feb 28, 2020, 11:26 AM IST

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் சென்னையில் காலமானார்.

கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன். திருமணம் செய்து கொள்ளாத இவர், தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி நேற்று முன் தினம் காலமானார். 2 நாட்களுக்குள் இன்னொரு திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மறைந்தது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மறைவைத் தொடர்ந்து சட்டசபையில் திமுகவின் பலம் 98 ஆக குறைந்துள்ளது.

You'r reading குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை