தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலி..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியும் 528 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்16) ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 61 பேரும் அடக்கம். தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48,019 பேராக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1438 பேரையும் சேர்த்து 26,782 பேர் குணம் அடைந்துள்ளனர்.மேலும், மலேசியாவில் இருந்து வந்த ஒருவர், கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மற்றும் டெல்லி 4, உ.பி.2, மகாராஷ்டிரா 25, கர்நாடகா 5, குஜராத் 4, கேரளா 3, ஆந்திரா 2, ராஜஸ்தான், தெலங்கானா, ஜார்கண்டில் இருந்து தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் மட்டும் நேற்று 1438 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் நேற்று 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3108 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 52 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 1945 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 47 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 803 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது. நெல்லை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அதை விடக் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது.

தமிழகத்தில் நேற்று தான் அதிகபட்சமாக கொரோனா நோயாளிகள் 49 பேர் பலியாயினர். இதை அடுத்து, சாவு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்தது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds