தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சமானது.. பலி 8307 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தைத் தாண்டுகிறது.
தமிழகத்தில் நேற்று(செப்.12) 5495 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 97,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தினமும் புதிதாக தொற்று கண்டறியப்படுபவர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதால், இன்று(செப்.13) மாலை தமிழக அரசு வெளியிடக் கூடிய மருத்துவ அறிக்கையில், அனேகமாக பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டி விடும்.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6227 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 41,649 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 76 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8307 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 47,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 978 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 47,591 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 267 பேருக்கும், கோவையில் 428பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும், கடலூரில் 263 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 299 பேருக்கும், தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டில் இது வரை 30,065 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,025 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 86,486 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 57 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds