புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு குறைந்தது..

தமிழகத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாகப் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை நேற்று(அக்.12) 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரம் வரை உயர்ந்தது.

தற்போது படிப்படியாகக் குறைந்து நேற்று (அக்.12) முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. நேற்று 4879 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 61,264 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5165 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 7203 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 62 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,314 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் நேற்று புதிதாக 1212 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 245 பேருக்கும், திருவள்ளூர் 229, காஞ்சிபுரம் 139, கோவையில் 393, ஈரோடு 146, திருப்பூர் 185, நீலகிரி 144, நாமக்கல் 143, சேலம் 304, தஞ்சாவூர் 146, திருவாரூர் 114, கடலூர் 132, வேலூர் மாவட்டத்தில் 130 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 14 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 83,251 பேருக்கும், செங்கல்பட்டில் 39,621 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,958 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :