10 ரூபாய் டாக்டர் கோபாலன் மரணம் – சோகத்தில் வடசென்னை மக்கள்

சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் மரணம்

வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உயிரிழந்தார்.

மன்னார்குடியை சேர்ந்தவர் கோபாலன், கடந்த 1966-ம் ஆண்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தார். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ உயர்படிப்பான MS பயின்றார்.

இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2002 இல் மின்டில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

1969-ம் ஆண்டு முதல் சென்னை வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை வைத்து, 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். 1976-ம் ஆண்டு முதல் 2 ரூபாயில் இருந்து 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர் மக்களாகவே சில்லரை தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்தனர். இவருக்கு 10 ரூபாய் டாக்டர் என்ற அடைமொழி உண்டாது.

மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த மருத்துவர் கோபாலன், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 77.

10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலனும் மறைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :