தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 4 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
![Banwarilal purohit.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/09/3092018blobid1535951874007.jpg)
சென்னை கோட்டூர்புரம் படேல் சாலையில் ஆளுநர் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்கள் அதி வேகமாக ஆளுநர் வாகனத்தை கடந்து சென்றது.
இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தினேஷ், நவீன், தனியார் கல்லூரி் மாணவர்கள் மரிய அந்தோணி, ஹரிபிரசாத், தனியார்நிறுவன ஊழியர்கள் அருண் கணேஷ், லோகேஷ் ஆகிய 7 பேரை போக்குவரத்து போலீஸார் பிடித்தனர்.
அவர்கள் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.