பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரமில்லை- அமைச்சர் பகீர் தகவல்

அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் முன்பாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 100 நூலகங்களில் ஒய் பை வசதி இலவசமாக ஏற்படுத்தி தருவதற்காக ACT நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் பேசிய அவர், "நிதி நெருக்கடி காரணமாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள், நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்பு எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 7 ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது"

"ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரையில் ஏற்கனவே தேர்ச்சி பெற்று 86 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். காலிப்பணியிடங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சு பகுதி நேர ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds