சிறுமியையும், தாயையும் நான் கொலை செய்யவில்லை: தஷ்வந்த்

குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் வசித்து வருபவர் தஷ்வந்த். அதே குடியிருப்பில் வசித்து வந்த பொறியாளர் மகள் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் (24) பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தார். இதற்காக, குண்டர் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அட

Dec 29, 2017, 16:03 PM IST

குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் வசித்து வருபவர் தஷ்வந்த். அதே குடியிருப்பில் வசித்து வந்த பொறியாளர் மகள் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் (24) பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தார். இதற்காக, குண்டர் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தாய் சரளாவை கொலை செய்தான். பின்னர் தாயார் அணிந்திருந்த 25 பவுன் மற்றும் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 20 ஆயிரத்துடன் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை காவல் துறையினர் பிடித்தனர். அவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னைக்கு கொண்டு வரும் வழியில், ஓட்டலில் சாப்பிட்ட போது போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பி ஓடிவிட்டான்.

அவனை பிடிக்க மும்பை போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். நேற்று முன்தினம் மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கி இருந்த தஷ்வந்தை மீண்டும போலீசார் கைது செய்தனர். அவனை மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தஷ்வந்த், “சிறுமி ஹாசினியையும், தாய் சரளாவையும் நான் கொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி கொடுத்தால் முழு விவரமும் அளிக்க தயார்” என்றும் தெரிவித்துள்ளார்.

You'r reading சிறுமியையும், தாயையும் நான் கொலை செய்யவில்லை: தஷ்வந்த் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை