தீபாவளி முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை ஜோர்

தீபாவளி வரும் 6ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விடுக்கபட்ட நிலையில் தற்போது தான் பட்டாசு விற்பனை வேகமெடுத்துள்ளது. சென்னை நகர் முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய சுமார் 900 தற்காலிக கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை விட சுமார் 740 கடைகள் குறைவாக இந்த ஆண்டு 4900 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தீயணைப்புத்துறை இயக்குனர் மஹேந்திரன் உத்தரவின் பேரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டது. அதன்படி, கான்க்ரீட் கட்டடங்களில் மட்டுமே பட்டாசு கடைகள் அமைக்கப்படவேண்டும், கூரையோ, பந்தலோ அமைத்து கடைகள் அமைக்க கூடாது. நடைபாதையில் கடை வைக்கக்கூடாது. உயரழுத்த மின்கம்பி இருக்கும் இடத்தில் கடையமைக்க கூடாது. அடுக்கு மாடி கட்டடங்கள் இருக்கும் இடத்தில் தற்காலிக கடையமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், சமையல் கியாஸ் குடோன், பெட்ரோல் நிலையங்கள் அருகில் போன்ற மக்கள் அதிகளவில் இருக்கும் இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் தீயணைப்பு கருவி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து இல்லாமல் மக்கள் இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய கட்டுப்பாடுகளுடன் தீயணைப்புத்துறை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. சென்னையில் 4 இடங்களில் மட்டுமே தீவிபத்து ஏற்பட்டது. இந்த ஆண்டு எந்த ஒரு விபத்தும் இல்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

பட்டாசு கடைகள் வைத்துள்ளவர்கள் விதியை மீறினால் அவர்கள் மீதி உடனடி நடவடிக்கை எடுக்க தீயணைப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து சென்று கடைகளை கண்காணிப்பார்கள்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds