முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன், இது சத்தியம்- பொன் மாணிக்கவேல் பேட்டி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறும் நிலையில், தான் முழு மனதுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் 1958-ம் ஆண்டு பிறந்தார். 1989-ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெற்றார். குறிப்பாக, குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்தவர்.

பொன்.மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "காவலர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது. அதனால், அவர்களின் குடும்பத்தினரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை சட்டம் என்ன சொல்லுகிறதோ அதை மட்டுமே செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்களின் உயரதிகாரிகளின் சேவகர்கள் அல்ல. அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்க வேண்டும். அவர்களின் அறிவுரை சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். வேலையை முடித்துவிட்டு பேசாமல் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதன்பிறகு, செய்தியாளர் ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பியபோது "எனக்குத் தெரியாது" என பதிலளித்தார்.

பின்னர், முழுமனதுடன் ஓய்வு பெறுகிறீர்களா என கேட்டபோது, "சத்தியமாக முழுமனதுடன் ஓய்வு பெறுகிறேன். ஊடகங்களின் ஆதரவுடன் முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன். அதிகாரிகளால் தான் எனக்குப் பிரச்சினை. அரசியல்வாதிகளாலோ அரசாலோ எந்தத் தொந்தரவும் இல்லை" என பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds