எக்மோ பொருத்திய பின்னும் துடித்த இதயம்! - விலகாத ஜெயலலிதா மரணத்தின் மர்மம்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அவரது மரணத்தில் இன்றளவும் மர்மம் நீடிக்கிறது. இந்த மர்மத்தை விடுவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி.

ஆனால், ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விடுபட்டதாகத் தெரியவில்லை. மெரினா சமாதியில் யார் பெரியவர் என செல்வாக்கைக் காட்டியதோடு முடித்துக் கொண்டனர் தமிழக முதல்வர் எடப்பாடியும் தினகரனும்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார் சமூக ஆர்வலரான கீதா நாராயணன். அவர் கேட்டுள்ள கேள்விகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அவரது பதிவு பின்வருமாறு:

ஜெ எப்படித்தான் இறந்தார்?

அவருடைய அட்மிஷன் சம்மரியில் என்ன எழுதப்பட்டிருந்தது? ஏன் சிசிடிவி கேமராபதிவு வீட்டிலும் மருத்துவமனையிலும் கிடைக்கவில்லை?

அவருடைய கையெழுத்தைப் போட்டவர்களுக்கு என்ன தண்டனை? அரசு ஆணையில் அவர் கையெழுத்தைப் போட்டவர் வேறு எதில் கையெழுத்திட்டிருக்கக் கூடும்? அவர் உடல்நிலை பற்றிப் பொய்யான மருத்துவ அறிக்கைகள் கொடுத்தவருக்கு என்ன தண்டனை?

ஏன் ராகுல்காந்தி முதல் ஸ்டாலின் வரை அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை? அவருக்குக் கால்கள் இருந்தனவா? கவர்னர் வித்யாசாகர் ஏன் அவர் உடல்நிலையைப்பற்றிப் பொய்யுரைத்தார்?

வீட்டிற்குள்ளேயே இருந்த மருத்துவமனை ஏன் அவர் சர்க்கரையைக் கூடக் கட்டுப்படுத்தவில்லை? அப்பல்லோவில் தேவையே இல்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டிருந்த வெங்கையா நாயுடுவை ஏன் கமிஷன் விசாரிக்கவில்லை?

காணாமல் போன அந்த உதவியாளர் பெண் என்ன ஆனார்? ஜெயலலிதா வீட்டில் கடந்த காலத்தில் வேலை செய்த உதவியாளர்களை ஏன் விசாரிக்கவில்லை?

டிசம்பர் 4 ஆம் தேதி நின்று போன இதயத்தை இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்திய பின் 60 சதவீதம் துடித்த இதயத்தை ஏன் நிறுத்தினார்கள்?

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அதிமுகவின் பவர் டைனமிக்ஸ் கூட்டங்கள் பற்றி ஏதாவது விசாரணை நடந்ததா? இதற்குப்பதில் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. பதில்கிடைத்தால் தேர்தல் ஜனநாயகத்தின் முக்கியமான சதிகளில் ஒன்றாக இருக்கும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

-அருள் திலீபன்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds