இந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு!

by Loganathan, Nov 25, 2020, 20:33 PM IST

இந்­தி­யாவின் இறையாண்­மைக்கும், பாது­காப்­புக்கும் தீங்கு விளைவிக்கும் 43 கைப்­பேசி செய­லி­களை தடை செய்ய மத்திய மின்னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப துறை அமைச்­ச­கம் இன்று உத்­த­ரவு பிறப்­பித்­தது.

அலி சப்­ளை­யர்ஸ், அலி­ பாபா, அலிஎக்ஸ்பி­ரஸ், கேம்­கார்ட், டேட் இன் ஆசியா, சைனீஸ் சோசி­யல் உட்­பட 43 கைப்­பேசி செயலி­கள், இந்­தி­யாவின் இறையாண்மை மற்­றும் பாது­காப்­புக்கு எதி­ரான நடவடிக்­கை­க­ளில் ஈடுபடுவ­தாக மத்திய உள்­துறை அமைச்­ச­கத்தின் சைபர் குற்றம் ஒருங்கி­ணைப்பு மையம் தக­வல் அளித்­தது.

இதை­ய­டுத்து இந்த 43 கைப்பேசி செய­லி­க­ளையும் தடை செய்­வ­தற்­கான உத்­த­ரவை மத்திய மின்­னணு மற்றும் தக­வல் தொழில்­நுட்ப துறை அமைச்­ச­கம் இன்று பிறப்பித்­தது.

இதற்கு முன்பு கடந்த ஜூன் 29ம் தேதி 59 கைப்­பேசி செய­லி­க­ளையும், கடந்த செப்­டம்­பர் 2ம் தேதி 118 கைப்­பேசி செய­லி­க­ளை­யும் மத்திய அரசு தடைசெய்தது குறிப்பிடத்­தக்­கது.

You'r reading இந்திய இறையாண்மைக்கு எதிரான 43 மொபைல் ஆஃப்களுக்கு ஆப்படித்தது மத்திய அரசு! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை