அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்த இந்தியர் - காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் போலீஸ்

indian doctor found dead at New Jersey hospital campus

by Sasitharan, Mar 30, 2019, 22:21 PM IST

அமெரிக்காவில் உள்ள நியு ஜெர்ஸி மருத்துவமனை வளாகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நந்திகம் மணிதீப் என்ற மருத்துவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் காந்திநகர் சிந்தனூர் தாலுக்காவைச்சேர்ந்த வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஸ்ரீநிவாஸ், பத்மா தம்பதியினர். இவர்களுக்கு நந்திகம் மணிதீப் மற்றும் ஷிவா நந்திகம் என்ற இரு மகன்கள் உள்ளனர். மணிதீப் மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் டிகிரி முடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்காவின் நியுஜெர்ஸி சென்றார். பட்டப்படிப்பு முடித்து அங்கு செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலைக் கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரது சகோதரர் ஷிவா நந்திகம் மென்பொருள் பொறியாளராக பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

இறந்த மணிதீப் மைசூருவின் ராமகிருஷ்ணா வித்யாசாலா மாணவராவார். இவர் என்.சி.சியிலும் இருந்துள்ளார். இவரது திடீர் மரணம் குறித்த காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் ஸ்ரீநிவாஸ், பத்மா என்ற இவரது பெற்றோர் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இது தொடர்பாக விசாரணை தேவை என்று இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவமனையில் இவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளது தொடர்பாக ரெய்ச்சூர் உதவி போலீஸ் ஆணையர், மரணத்திற்கான காரணம் விசாரணை முடிந்த பிறகே தெரியும் என்றார். இன்னொரு உயரதிகாரி டி. கிஷோர் பாபு குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து வருகிறார்.

 

You'r reading அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்த இந்தியர் - காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் போலீஸ் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை