Dec 10, 2020, 18:48 PM IST
டெல்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்தினர். Read More
Dec 10, 2020, 18:39 PM IST
இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணத்திற்கு வர சவுதி அரசு அனுமதி மறுத்துவிட்டது. எனவே அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விர் தெரிவித்தார் Read More
Dec 10, 2020, 18:32 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையைக் கைவிடக்கோரி நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.ஆயுஸ் மருத்துவத்தில் தேர்ச்சி பெறும் டாக்டர்கள் அலோபதி மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளைச் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
Dec 10, 2020, 16:14 PM IST
கேரளாவில் இன்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் மொய்தீன் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் ஓட்டுப் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. Read More
Dec 10, 2020, 16:09 PM IST
ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களைச் சுட்டுக் கொன்றது திமுக ஆட்சி, விவசாயிகள் போராட்டத்தின் போது துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வராமல் மலர்களா வரும் என விவசாயிகளுக்கு எதிராக அப்போது கருணாநிதி பேசினார். Read More
Dec 10, 2020, 15:43 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளது. இந்த மண்டலக் காலத்தில் நடை திறந்து 23 நாட்களில் இதுவரை ₹ 3.82 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் ₹ 66 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 10, 2020, 15:33 PM IST
ஆந்திராவில் சுங்கச் சாவடி ஊழியரை ஜெகன் கட்சி பெண் பிரமுகர் அடித்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாரியங்களில் ஒன்றின் தலைவர் பதவியில் ரேவதி என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெண் தலைவர் இருக்கிறார். Read More
Dec 10, 2020, 15:29 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர், மீண்டும் டிச.14 முதல் டெல்லி சலோ போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். Read More
Dec 10, 2020, 12:30 PM IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 10, 2020, 09:13 AM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார். Read More