Aug 28, 2019, 10:59 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது. Read More
Aug 28, 2019, 09:33 AM IST
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 10 வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று ஒரே நாளில் விசாரிக்கிறது. Read More
Aug 26, 2019, 14:34 PM IST
'சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வெளியிடுகின்றனர். ஆனால், அவரிடம் சி.பி.ஐ விசாரிக்கும் போது, ‘ட்விட்டர் கணக்கு வைத்திருக்கிறீர்களா?’ என்பது போன்ற கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறார்கள்’’ என்று கபில்சிபல் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 19, 2019, 09:26 AM IST
தமிழக அரசு,ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ.4-ம், எருமைப்பாலுக்கு ரூ 6 -ம் அதிகரித்து விட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பாக்கெட் பாலின் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அரசின் நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்துள்ளன. Read More
Aug 16, 2019, 10:39 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More
Aug 15, 2019, 19:01 PM IST
நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்து துறைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையும் விதியை மீறுவோருக்கு மின்னணு ரசீது, பற்றுகை சீட்டுகளை தருகிறது. புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்போது நேரிடும் சிக்கல்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையையும் விட்டு வைக்கவில்லை. தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கார் வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கு இ-செலான் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2019, 09:43 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது. Read More
Aug 3, 2019, 16:14 PM IST
‘காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை’’ என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவர்னரை சந்தித்த பின்பு கூறியுள்ளார். Read More
Aug 3, 2019, 13:36 PM IST
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், அங்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையை இம்முறை காஷ்மீரில் நிகழ்த்த உள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Read More
Aug 3, 2019, 11:06 AM IST
சாமான்யர்களின் மருத்துவக் கனவுக்கு சாவுமணி அடிப்பது போல் அடுத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவக் கல்வி இயக்குநரகம். அட்மிஷன் பெற்றுவிட்டு படிப்பை தொடர முடியாவிட்டால் ரூ .10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி, மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். Read More