May 21, 2019, 10:08 AM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது ஒரு மோசடி வேலை .. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட்டு சோர்வடைந்து விட வேண்டாம் என உருக்கமாக பேசும் ஆடியோ ஒன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
May 21, 2019, 09:18 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இன்று மாலை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தவும், எந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
May 21, 2019, 08:15 AM IST
தேர்தல் முடிவுகள் வரும் வரை காங்கிரஸ் பக்கம் சாயாமல் காத்திருக்க மாயாவதியும், அகிலேஷும் முடிவு செய்திருக்கிறார்கள் Read More
May 20, 2019, 16:59 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் எல்லா சேனல்களுமே பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என கூறியிருப்பதால், இதில் பா.ஜ.க. சதி எதுவும் இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன Read More
May 20, 2019, 12:20 PM IST
‘‘நாங்கள் கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முடிவுகள் வந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 20, 2019, 09:03 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முயற்சியால் இன்று டெல்லி செல்லும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை அக் கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் யாரையும் சந்திப்பது மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் மாயாவதி பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
May 18, 2019, 14:05 PM IST
ஒரு கேள்விக்கும் பதிலளிக்காத பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பை கிண்டலடிக்கும் வகையில் டெலிகிராப் ஆங்கில நாளிதழ், சிறிது காலியிடத்தை விட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது Read More
May 18, 2019, 13:28 PM IST
தேர்தல் பிரச்சாரத்தை முடித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கேதர்நாத், பத்ரிநாத் என்று கிளம்பி விட்டார் Read More
May 18, 2019, 13:20 PM IST
பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் Read More
May 17, 2019, 19:48 PM IST
பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி இன்று முதன் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் வெறுமனே சிறிய உரை மட்டும் நிகழ்த்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் அமித் ஷா பக்கம் திருப்பி விட்ட விநோதமும் அரங்கேறியது Read More