May 8, 2019, 14:46 PM IST
தமிழகத்தில் தேனி உட்பட 46 பூக்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக,தேனி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்ததற்கு புதிய விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு Read More
May 8, 2019, 08:53 AM IST
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது. Read More
May 7, 2019, 12:44 PM IST
தற்போது வரை நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலின் படி, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை 3-வது அணிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சுறுசுறுப்பாகி விட்டார் Read More
May 7, 2019, 11:14 AM IST
உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் சபாநாயகரின் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சந்தேகம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு விடை கேட்டு சட்டப் பேரவை செயலாளரிடம் மனுவும் கொடுத்துள்ளார் பிரபு Read More
May 2, 2019, 09:52 AM IST
சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர் Read More
May 2, 2019, 08:22 AM IST
பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை அம்பலப்படுத்திய வக்கீலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல அரசியல் பிரமுகரை காப்பாற்ற முயற்சிக்கும் விதமாக வக்கீலின் செல்போனில் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை போலீசார் அழித்ததாக பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. Read More
May 2, 2019, 08:16 AM IST
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. Read More
May 1, 2019, 10:12 AM IST
சென்னை மெரினா கடற்கரையில், நாய் ஒன்று கடித்ததில் ரேபிஸ் ஏற்பட்டு குதிரை உயிரிழக்கவே, சவாரிக்காக பயன்படுத்தப்படும் அனைத்துக் குதிரைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது Read More
May 1, 2019, 08:33 AM IST
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து, பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 3 நபர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 30, 2019, 22:15 PM IST
தேர்தலில் வெல்லப் போவது யார் என்று அறிந்து கொள்ள மே 23ம் தேதி வரை காத்திருக்காமல், அதற்கு முன்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆடு புலி ஆட்டத்தை துவங்கியுள்ளன. இந்த ஆட்டத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. Read More