Jul 25, 2019, 13:51 PM IST
ஜெயலலிதா தமக்கு 3 முறை ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்தார். இப்போதும் அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது தமக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்காதது வருத்தமளிக்கிறது என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் மைத்ரேயன் தமது குமுறலை வெளிப்படுத்தி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 25, 2019, 13:41 PM IST
குஜராத்தில் லாக் அப் முன்பாக இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி, டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 25, 2019, 13:34 PM IST
ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Read More
Jul 25, 2019, 11:34 AM IST
பாகிஸ்தானில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை ஆயுதப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. Read More
Jul 25, 2019, 11:19 AM IST
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Jul 25, 2019, 11:11 AM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்தார். பரோலில் இருக்கும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Jul 25, 2019, 10:27 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டார். ஆனால், அடுத்த 2 மணி நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். Read More
Jul 25, 2019, 10:21 AM IST
கர்நாடக அரசியலில் 2 வாரங்களுக்கும் மேலாக வீசிய சூறாவளி குமாரசாமி அரசை காவு வாங்கி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அமைதி காக்கின்றனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, ஆட்சியமைக்க உரிமை கோரும் முடிவில் பாஜக தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 25, 2019, 09:30 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென சென்னை விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக பயணிகள் பலர் அவரிடம் புகார் தெரிவித்தார். Read More