Nov 15, 2020, 15:53 PM IST
இந்த ஆண்டு 2020 தமிழ்நாடு முழுவம் டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.13ம் தேதியன்று 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், நவ.14 தீபாவளியன்று 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இரண்டே நாளில் மொத்தம் ரூ.465 கோடி 79 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. Read More
Nov 15, 2020, 12:44 PM IST
ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு தக்காளி லாரியில் பயங்கர வெடிபொருட்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். Read More
Nov 15, 2020, 11:35 AM IST
கொரோனா அச்சத்திற்கு இடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Nov 14, 2020, 19:08 PM IST
கொரோனா பரவலுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. Read More
Nov 14, 2020, 18:46 PM IST
கேரளாவில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Nov 13, 2020, 19:13 PM IST
மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செய்துவருவதாகவும் செய்திகள் கசிந்தன. Read More
Nov 12, 2020, 17:24 PM IST
13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Nov 12, 2020, 17:07 PM IST
கேரளாவில் தீபாவளிக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவில் 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் என்று கேரள உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மியான்மர், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 11:00 AM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More