Jul 16, 2019, 23:17 PM IST
சீன தயாரிப்பான ரியல்மீ எக்ஸ் மற்றும் ரியல்மீ 3ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
Jul 16, 2019, 21:12 PM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் சரியாக இருக்கும் போது, சபாநாயகர் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். பரபரப்பான இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jul 16, 2019, 15:49 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 16, 2019, 15:38 PM IST
தபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 16, 2019, 15:26 PM IST
அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 16, 2019, 14:39 PM IST
‘நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் அமைச்சர்கள் யார், யார்? இன்றே பட்டியல் கொடுங்கள்...’’ என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. Read More
Jul 16, 2019, 14:35 PM IST
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘என்றைக்குமே எங்கள் மம்மி ஆட்சிதான்’’ என்று பதில் கொடுத்தார். Read More
Jul 16, 2019, 14:14 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கறாராக பதிலளித்துள்ளார். Read More
Jul 16, 2019, 13:13 PM IST
தபால் துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More