Aug 16, 2019, 11:40 AM IST
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி தலைவாஸ் அணியின் உரிமையாளராக இருந்த சந்திரசேகர், வங்கிக் கடன் தொல்லையால் தற்கொலை முடிவை மேற்கொண்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Aug 15, 2019, 09:46 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் டி20 போட்டி போல் விஸ்வரூபம் எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது. Read More
Aug 14, 2019, 10:21 AM IST
மே, இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழை மிரட்டல் காரணமாக போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இன்றைய போட்டியில் வென்றாலோ அல்லது போட்டி ரத்தானாலோ, மே.இ.தீவுகள் மண்ணில் தொடர்ந்து 4 - வது முறையாக ஒரு தொடரை கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது. Read More
Aug 11, 2019, 20:14 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More
Aug 6, 2019, 09:29 AM IST
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். Read More
Aug 6, 2019, 09:13 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 5, 2019, 09:18 AM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்தியா சாதித்தது. ரோகித் சர்மாவின் (67) அதிரடியால் இந்தியா 167 ரன்களை குவிக்க, தொடர்ந்து மே.இ.தீவுகள் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. Read More
Aug 3, 2019, 23:02 PM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 95 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனால் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது. Read More