Jul 4, 2019, 12:54 PM IST
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ராகுல்காந்தி மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர், அவர் பேட்டி அளிக்கும் போது, ‘‘இன்னும் 10 மடங்கு கடினமாக போராடுவேன்’’ என்று ஆவேசமாகக் கூறினார். Read More
Jul 4, 2019, 10:19 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. Read More
Jul 4, 2019, 09:56 AM IST
தேர்தலில் பா.ஜ.க.வை மட்டும் எதிர்த்து போராடவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணிவகுத்து வந்த ஒவ்வொரு அரசியலமைப்பையும் எதிர்த்தும் போராடினோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Jul 3, 2019, 13:27 PM IST
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jun 28, 2019, 10:23 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க, அது நடக்கிறதோ, இல்லையோ, ஒரே தேசம், ஒரே கட்சி என்று கொண்டு வர எத்தனிக்கிறது போல் தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமுல், தெலுங்குதேசம் என வரிசையாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் முக்கியப் பிரமுகர்களை தொடர்ந்து இழுத்து வருகிறது. Read More
Jun 27, 2019, 11:34 AM IST
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். Read More
Jun 26, 2019, 15:35 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2019, 14:43 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jun 24, 2019, 12:51 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ள ராகுல்காந்தி, கட்சி தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட மறுத்து வருகிறாராம். இதையடுத்து, புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர் Read More
Jun 22, 2019, 09:26 AM IST
மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது Read More