Aug 21, 2019, 12:31 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். Read More
Aug 21, 2019, 12:14 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, உடனடியாக முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Aug 21, 2019, 11:16 AM IST
மத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார். Read More
Aug 21, 2019, 10:27 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மறுக்கப்பட்டதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக, சுப்ரமணிய சாமி டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 21, 2019, 10:14 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி முற்றியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் சோதனையிட சிபிஐயும், அமலாக்கத்துறையும் மும்முரம் காட்டின. Read More
Aug 20, 2019, 22:50 PM IST
ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் ஆகியோர் 2019 ஆண்டுக்கான அர்ஜுனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். Read More
Aug 20, 2019, 19:33 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் நம் பாக்கெட்டுகளில் உள்ள பிளாஸ்டிக்கால் ஆன ஏடிஎம் கார்டுகளை முற்றிலும் காலி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க யோனோ கேஸ் என்னும் புதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது Read More
Aug 20, 2019, 19:32 PM IST
நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தால், அந்தப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்று சோதிப்பதற்கு எத்தனையோ கேள்விகள் கேட்பர். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வது தவிர, தேர்வுக்கு வரும் பணி நாடுநர் பெரும்பாலும் கேள்விகளே கேட்பதில்லை. ஏதாவது கேட்கப் போய், இண்டர்வியூ செய்பவர் அல்லது குழுவினர் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சமே, கேள்விகளை கேட்கவொட்டாமல் செய்து விடுகிறது. Read More
Aug 20, 2019, 14:13 PM IST
தனது மருமகனும், தொழிலதிபருமான ரதுல் புரியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததற்கு ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 20, 2019, 14:02 PM IST
ஆவின் நிறுவனம் லாபத்தில்தானே இயங்குகிறது, பிறகு ஏன் பால் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார். Read More