“தில்லுக்கு துட்டு” பார்ட் 2 எடுக்க முடிவு ?
சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் ரிலீசான படம் தில்லுக்கு துட்டு. இதில், ஷனன்யா ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆனந்த்ராஜ், கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஹாரர் காமெடிப் படமான இப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் இசையமைக்க, பின்னணிக்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார்.
இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, 30 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஆனால், இந்த படத்தின் செலவு 6 கோடி மட்டுமே ஆனது. அதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
You'r reading “தில்லுக்கு துட்டு” பார்ட் 2 எடுக்க முடிவு ? Originally posted on The Subeditor Tamil
More Cinema News