இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் திடீரென்று நடிகர்களாகிவிட்டனர். இசை அமைப்பதை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில் வடகறி, பட்டாஸ், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள இரட்டை யர்கள் விவேக் மெர்வின் அவ்வப்போது சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியிட்டு கலக்குகின்றனர். ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட ஒரசாதே பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி செம ஹிட்டாகி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது காண்டு கண்ணம்மா என்ற பாடலை பாடி உள்ளனர். கு.கார்த்திக் எழுதி உள்ளார். இதுவிரைவில் யூ டியூபில் வெளியாகிறது.
இதுபற்றி விவேக், மெர்வின் கூறும்போது,'காண்டு கண்ணம்மா.. பாடலின் கான்செப்ட் பொண்ணு கோபமாக இருக்காங்க.. அவங்க சொல்றதை எல்லாம் பையன் பாசிட்டிவாக எடுத்துக்கிறான் இதுதான் பாடலின் சூழ்நிலை. நாங்கள் திரைப்படங் களில் அதிக கவனம் செலுத்துகிறோம். படங்களில் பாடல்கள் இடம்பெறுவது குறைந்த வரும் நிலையில் படடாஸ் படத்தில் 6 பாடலுக்கு இசை அமைத்தோம். படத்தில் இன்னும் அதிக பாடல்கள் இடம்பெற்றாலும் இசை அமைக்க விருப்பமாக இருக்கிறோம். அதேசமயம் பாடல்கள் இல்லாவிட்டாலும் அதற்கு எங்களால் முடிந்த பெஸ்ட் பேக்ரவுண்ட் இசையை கொடுக்க முடியும். .நாங்கள் யாரோடும் போட்டி போடவில்லை. எங்கள் ஜெனரேசனில் எல்லா இசை அமைப்பாளருமே பிரண்ட்ஸாக இருக்கிறோம். எங்களுக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை' என்றனர்.