அஜீத்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
பெங்களூர் விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த அதிகாரிகள் 21 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றதும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.இணைய தளத்தில் பொழுதைக் கழிக்கும் ஷ்ரத்தாவுக்கு போரடித்து விட்டதால் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்தார். அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தற்போது திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறாராம்.