கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நடிகர் பிருத்விராஜ் , ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவன பகுதியில் சென்றார், அவருடன் படக் குழுவினரும் சென்றனர். சிறப்பு அனுமதி பெற்றுப் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பிருத்விராஜ் மற்றும் படக் குழுவினர் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
சுமார் 50 நாட்களாக மனைவி, குழந்தையைப் பார்க்க முடியாமல் தவித்து வருகிறார் பிருத்வி ராஜ். அதேபோல் அவரது மனைவியும் மகளும் கேரளாவில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிருத்விராஜ் மனைவி சுப்ரியா மேனன் பிருத்விராஜூடன் இருக்கும் குடும்ப புகைப்படம் வெளியிட்டு உருக்கமான மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் எனது மகள், லாக் டவுன் எப்போது முடியும், அப்பா எப்போது வருவார்? என்று கேட்ட வண்ணம் இருக்கிறாள். இன்றைக்கு வந்துவிடுவாரா? என்று கேட்டு அழுகிறாள். அவர் பிரிவால் நாங்கள் வாடுகிறோம் இப்போது வரை நானும் என் மகளும் பிருத்வி வரவுக்காகக் காத்திருக்கிறோம் என உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
விரைவிலேயே பிருத்வி வந்துவிடுவார் கவலை வேண்டாம் என ரசிகர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி மெசேஜ் பதிவிட்டு வருகின்றனர்.