சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.. அமித்ஷாவுக்கு நடிகரின் காதலி வேண்டுகோள்..

Sushant suicide case to be Handover to CBI: Reha Request To Amit Shah

by Chandru, Jul 17, 2020, 10:40 AM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை பாந்தரா பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குடும்பத்தினர். காதலி, பட அதிபர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் தந்திருக்கின்றனர். ஆனால் போலீஸார் இன்னும் வழக்கு குறித்தும் உறுதியான நடவடிக்கை குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சுஷாந்த் மரணத்துக்கு மன அழுத்தம் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை என்ன காரணம் என்பதை போலீஸார் உறுதிப் படுத்தவில்லை. இந்நிலையில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தனது இணைய தள பக்கத்தில் சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரியா வெளியிட்டுள்ள மெசேஜில்,உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு.. நான் சுஷாந்த் கேர்ள் ஃபிரண்ட். சுஷாந்த் இறந்து ஒரு மாதம் ஆகிறது. நான் அரசு மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றாலும் நீதி வேண்டும் என்ற முறையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என கோரியுள்ளார்.

You'r reading சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.. அமித்ஷாவுக்கு நடிகரின் காதலி வேண்டுகோள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை