74வது சுதந்திர நாளில் இந்தியாவை ஒரு புள்ளியில் திரட்டிய உலகின் மிகப் பெரிய தேசிய கீதம்.. கூகுள் உடன் இணைந்து பரத்பாலா நிகழ்த்திய அற்புதம்..

Bharatbala reimagines the worlds greatest anthem Jana Gana Mana

by Chandru, Aug 15, 2020, 17:54 PM IST

உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் ஜன கன மன பாடலில் மக்களை ஒரு புள்ளியில் இணைத்த அற்புதத்தை கூகுள் உடன் இணைந்து நிகழ்த்தி காட்டியிருக்கிறார் பரத்பாலா.
பரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகுள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரச்சார பாரதியின் முன்னெடுப்பு. செயற்கை நுண்ணறிவின் மூலம் எப்படி இந்தியக் குரல்களை ஒன்றிணைத்து அவற்றில் உணர்ச்சியைக் கொண்டு வரமுடியும்? ஒலி உணர்வு தொழில்நுட்பம் இல்லாமல் எப்படி இந்தியா பாடுகிறது? இந்திய மக்களை, இந்தியாவுடனான அவர்களின் உணர்ச்சியையும் தொழில் நுட்பத்தையும் ஒன்றாக இணைக்கும் சரியான உணர்வு எது? ஒரு மெய் நிகர் தேசத்தை உருவாக்க இந்தியர்களை எவ்வாறு இணைப்பது?மெய் நிகர் தேசிய கீதம்' சுதந்திர தினத்தன்று கூகிள் தேடல், யூடியூப் மாஸ்ட்ஹெட் மற்றும் தூர்தர்ஷனில் வெளியாகிறது.

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தன்று அருணாச்சல பிரதேசத்தின் மலைகள் முதல் தார் பாலைவனம் வரை இந்தியர்களின் குரல்கள் ஒன்றிணைந்த ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது. 2020, இந்தியர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆண்டு. இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள இந்தியர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடும் இந்த தேசிய கீதம் வலிமையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கூகிள் செயற்கை நுண்ணறிவு மூலம் சேகரிக்கப்பட்ட குரல்கள், பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட ஜன கன மன பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரச்சார பாரதி, கூகிள், விர்ச்சுவல் பாரத் ஆகியோரின் தனித்துவமான கூட்டு முயற்சியின் மூலம், இயக்குநர் பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் படமாக்கப்பட்ட தேசிய கீதத்தைச் செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்துடன் பாட இந்தியா அழைக்கப்பட்டது.இது குறித்து பரத்பாலா கூறும்போது, நாம் ஒருவருக்கு ஒருவர் விலகியிருக்கும் இந்த காலகட்டத்தில், மெய் நிகர் முறையில் இந்திய மக்களை ஒன்றிணைப்பதும், ஒரு மெய் நிகர் தேசத்தை உருவாக்குவதுமே என்னுடைய இந்த யோசனைக்குக் காரணம்.இந்தியாவை மெய் நிகர் முறையில் ஒன்றிணைத்து, இந்தியர்களை நம் கலாச்சாரம் பற்றிய குறும்படங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் ஒரே இடத்தில் இணைப்பதே என்னுடைய யோசனையின் நோக்கம். எனவே இது எல்லா காரணிகளின் இயல்பான மற்றும் சரியான கலவையாக இருந்தது. மேலும் முதன் முறையாக ஒரு தனித்துவமான செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்தில் குரல்களை ஒன்றிணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்திய குரல்களைத் தொழில்நுட்பம் போலத் தெரியாமல் மனிதக் குரல்களைப் போலவே உணரவைக்கும்படி எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம். உணர்வுகளை எவ்வாறு தக்கவைக்கப் போகிறோம்? எல்லாவற்றுக்கும் மேல் உலகின் மிகச்சிறந்த தேசிய கீதத்துக்கு எவ்வாறு ஆழமான, உண்மையான மரியாதையைச் செலுத்தப் போகிறோம்.

இதுபோன்ற யோசனைகளுக்கு ஒரு வகையான தொலைநோக்குப் பார்வையும் உண்மையான இந்திய நம்பிக்கையும் தேவை. கூகிள் இந்தியாவின் தலைவர் சஞ்சய் குப்தாவுக்கு என்னுடைய உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை மாதம் ஒரு நள்ளிரவில் அவர் என்னை அழைத்து சுதந்திர தினத்தன்று இந்திய நாடு ஒன்று சேர்ந்து பாடும் இந்த யோசனையை என்னிடம் கூறினார். இது ஒரு சிறந்த கூட்டு முயற்சியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.2000ஆம் ஆண்டில் 50 இந்திய மேஸ்ட் ரோக்கள் உடன் இணைந்து ஜன கன மன பாடலை உருவாக்கினோம். என்னைப் பொறுத்தவரை இது நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கீதத்தின் புதிய வெளிப்பாடு. இது ஒரு சரியான பொருத்தமாக இருந்தது. கூகிளின் கூகிள் ஃபார் இந்தியா திட்டம் முற்றிலும் புதியது. டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் இந்தியச் சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உயர்த்துவது என்பது ஒரு நேர்மையான நோக்கம். அவர்கள் உயரிய நோக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அது இந்தியாவிலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு இந்தியர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

You'r reading 74வது சுதந்திர நாளில் இந்தியாவை ஒரு புள்ளியில் திரட்டிய உலகின் மிகப் பெரிய தேசிய கீதம்.. கூகுள் உடன் இணைந்து பரத்பாலா நிகழ்த்திய அற்புதம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை