2 பிரபல நடிகைகள் சிறையில் கதறல் சக பெண் கைதிகளுடன் அடைக்க நடவடிக்கை.. ஜாமீன் கிடைக்காததால் திகில்..
Bail Rejected: Actress Ragni, Sanjana Tears in Jail
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவர்கள் வீடுகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.ராகினி, சஞ்சனா இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களுர் பார்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் முதலில் ஒரே அறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது, இதையடுத்து தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டனர். இருவரும் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் இருவரும் நேற்று ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்த்து வெளியில் வரும் எண்ணத்துடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் இருவரும் சோகமும், திகிலும் அடைந்தனர்.
மேலும் கொரோனா காலம் என்பதால் அவர்கள் 14 நாட்கள் தனியாக அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. தனிமைப்படுத்தல் காலம் இருவருக்கும் முடிவடைவதால் 2 நாட்களில் அவர்கள் சக பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பொது சிறையில் அடைக்கப்படவிருக்கின்றனர். இந்த தகவலை அறிந்து இருவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மேல் கோர்ட்டில் மனு செய்தாவது ஜாமீன் பெற்றுவிட வேண்டும் என்று தங்களது வழக்கறிஞரிடம் நடிகைகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
You'r reading 2 பிரபல நடிகைகள் சிறையில் கதறல் சக பெண் கைதிகளுடன் அடைக்க நடவடிக்கை.. ஜாமீன் கிடைக்காததால் திகில்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News