தென்னிந்திய படங்களைவிட பாலிவுட்டில் தான் சுதந்திரம்.. நடிகை சமந்தா பரபரப்பு..

by Chandru, Dec 20, 2020, 10:00 AM IST

தென்னிந்திய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், அஞ்சலி என பல முக்கிய ஹீரோயின்கள் வெப் சீரிஸில் நடிக்கின்றனர். இவை தமிழ் தவிர பிற மொழிகளிலும் ஒடிடி தளங்களில் வெளியாகிறது. சமந்தா நடித்துள்ள தி ஃபேமலி மேன் வெப் சீரீஸ் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதன் புரமொஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமந்தா கூறும் போது, பாலிவுட்டில் ஒரு படத்தை எந்த ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஜெர்னரில் படம் எடுக்க நிறைய சுதந்திரம் இருக்கிறது. எல்லோரையும் தியேட்டருக்கு இழுத்து வர வேண்டும் என்ற அழுத்தம் கிடையாது. ஆனால் தென்னிந்திய படங்கள் அப்படி கிடையாது.

எல்லோரையும் தியேட்டருக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் படங்கள் உருவாக்கப்படுகின்றன என்றார். சமந்தாவை பொறுத்தவரை தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். முன்னதாக கொரோனா ஊரடங்கால் அவர் படப்பிடிப்புக்கு செல்லாமால் வீட்டிலிருந்தபோது பல பணிகளை செய்து வந்தார். காஸ்டியூம் டிசைன் செய்வது, சத்தான உணவு சமைப்பது போன்றவற்றை முறைப்படி கற்றுக்கொண்டார். மேலும் மாடி தோட்ட பராமரிப்பையும் செய்து வந்தார். பிறகு கடந்த சிலவாரம் அவர் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றார்.

அங்கு இரண்டு வாரம் கணவர் நாக சைதன்யாவுடன் பொழுதை கழித்தார். ஸ்கூபா டைவிங் செய்ததுடன் கடல் நடுவே உள்ள ரெஸ்டாரண்ட் என கணவுடன் சுற்றி வந்தார். மாலத்திவிலிருந்து திரும்பி வந்த சமந்தா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவரை இயக்குனர் விக்னேஷ் சிவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சமந்தா, விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இதில் நயந்தாராவும் நடிக்கிறார். அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியுடன் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பங்கேற்கிறார்.

You'r reading தென்னிந்திய படங்களைவிட பாலிவுட்டில் தான் சுதந்திரம்.. நடிகை சமந்தா பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை