விஜய் ஹீரோயினுடன் ஐதராபாத் சென்ற நடிகர்.. 50 நாள் முகாம்..

by Chandru, Jan 26, 2021, 10:15 AM IST

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்ராங்கி ரே இந்தி படத்தில் நடித்தார் தனுஷ். இதற்காக ஆக்ரா சென்று தாஜ்மகாலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கர்ணன் படத்தில் நடித்தார். அடுத்த கட்டமாக அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். டி43 எனத் தற்காலிக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் சமுத்திர கனி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்காக தனுஷ் ஒரு பாடல் பாடி இருக்கிறார். அந்த பாடலுடன் படப் பிடிப்பு தொடங்கியது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இதுபற்றி சில நாட்களுக்கு முன் வெளியிட்ட மெசேஜில், 'டி 43 பாடல் படப் பிடிப்பு தொடங்கியது. விவேக் எழுதிய பாடலை தனுஷ் பாடி உள்ளார். இதற்கான நடன காட்சிகள் ஸ்ட லாக அமைக்கப்பட்டுள்ளன என்றார்.இந்நிலையில் தனுஷ் 43 படப் பிடிப்புக்காகப் படக் குழு ஐதராபாத் பறந்துள்ளது. அவர்களுடன் மாளவிகா மோகனும் சென்றிருக்கிறார். தனுஷ், மாளவிகா நடிக்கும் முக்கிய காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் அங்குப் படமாக்கப்படுகிறது. இது 50 நாட்கள் நீண்ட படப்பிடிப்பாக நடக்க உள்ளது. படக்குழு 50 நாட்கள் ஐதராபாத்தில் முகாமிடுகிறது.

தனுஷ் மேலும் செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் கார்த்தி நடித்திருந்தார். பருத்திவீரனில் அறிமுகமான கார்த்தி தனது இரண்டாவது படமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார்.ஆயிரத்தில் ஒருவன் 2 ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் செல்வராகவன் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ஒரு ஸ்கிரிப்ட் எழுதும்போது எந்த பாத்திரம் பற்றி எழுதுகிறோமோ அந்த பாத்திரமாக மாற வேண்டி உள்ளது. இதற்காக நிறைய உழைப்பும், செயல்பாடும் செலவிட வேண்டும். நான் ஒரு காட்சியை முழுமையாக்க ஆயிரம் பக்கங்களுக்குத் திரும்பத் திரும்ப எழுதுவேன். எழுதுவது மிகவும் கடினம் என்றார். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதற்கிடையில் செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரில்லர் படமான இதில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் படத்தை முடித்த பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இது ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகமாக இருக்காது மற்றொரு புதிய படமாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில் தனுஷ் நடித்திருக்கும் ஜெகமே தந்திரம். கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படங்களை தியேட்டரில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

You'r reading விஜய் ஹீரோயினுடன் ஐதராபாத் சென்ற நடிகர்.. 50 நாள் முகாம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை