ஆக.,30ல் காதலனின் கரம் பிடிக்கும் சுப்ரமணியபுரம் சுவாதி

by Isaivaani, Aug 14, 2018, 14:13 PM IST

சுப்பிரமணியப்புரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ஸ்வாதி தனது நீண்ட நாள் காதலரான விகாஸ் என்பவரை வரும் ஆகஸ்டும் 30ம் தேதி திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.

தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சுவாதி. இவருக்கு, படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சுப்பிரமணியப்புரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுவாதி. இதற்கு பிறகு, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன்பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

இதற்கிடையே, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணிபுரியும் விகாஸ் என்பவருக்கும் சுவாதிக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்துள்ளது. சுவாதியின் வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்கும் படலாம் ஆரம்பித்ததால், தனது காதல் குறித்து சுவாதி வீட்டில் தெரிவித்துள்ளார்.

பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் சுவாதி & விகாஸ் திருணம் வரும் 30ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 2ம் தேதி கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு, விகாஸ் வசித்து வரும் இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தா என்ற பகுதியில் செட்டில் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading ஆக.,30ல் காதலனின் கரம் பிடிக்கும் சுப்ரமணியபுரம் சுவாதி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை