ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தோற்றத்தில் ஓட்டலில் சப்ளையராக வேலை செய்பவரை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று இயக்குனர் ராமகோபால் வர்மா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ராமகோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தோற்றத்தில் இருக்கும் ஒருவர் உணவு பரிமாறுகிறார். அவரைப் பார்த்தால் அச்சு அசலாக சந்திரபாபு நாயுடு மாதிரியே இருக்கிறார். அவரை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல் தெரிந்தால் Laksmisntr@gmail.com இந்த இ மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே என்டிஆர் வாழ்க்கையை வைத்து சினிமா எடுத்துக் கொண்டு இருக்கும்போது, ராம்கோபால் வர்மாவும் இந்த வீடியோவை பகிர்ந்து இருப்பது அவரும் என்டிஆர் வாழ்க்கையை வைத்து சினிமா எடுக்க இருக்கிறாரா அல்லது என்டிஆர் வாழ்க்கை படத்தில் நடிக்க உதவுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. இந்தப் படத்தை அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஸ்ரீதேவியாகவும், சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க, இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி வருகிறார்.