மீண்டும் பொன்னியின் செல்வனை கையில் எடுக்கும் மணிரத்னம்!
ManiRatnam takes PonniyinSelvan Story for newmovie
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் தனது முயற்சியை மீண்டும் மணிரத்னம் துவக்கியுள்ளார்.
செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் பலமுறை எடுக்க வேண்டும் என்று நினைத்து கைவிட்ட பொன்னியின் செல்வன் நாவலை மீண்டும் தூசி தட்டியுள்ளார்.
அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி என மல்டி ஸ்டாரர் படமாக உருவான செக்கச்சிவந்த வானம் படமே பொன்னியின் செல்வன் கதை தான் என ஆரம்பத்தில் யூகங்கள் கிளம்பின.
ஆனால், அது ஒரு கொரிய படத்தின் காப்பி என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திறம்பட ஒரு படத்தை இயக்கிய உத்வேகத்துடன், பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முயற்சியை மணிரத்னம் துவங்கியுள்ளார்.
இந்த படத்தில், விஜய், மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முதலில் பேசியுள்ளார். ஆனால், அவர்களது கால்ஷீட் கிடைக்காத நிலையில், சிம்பு, விக்ரம், ஜெயம் ரவியை வைத்து படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.
மேலும், படத்திற்கு இந்த ஹீரோக்கள் தயாராக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் அனுப்பி வைத்து படிக்க கட்டளையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
You'r reading மீண்டும் பொன்னியின் செல்வனை கையில் எடுக்கும் மணிரத்னம்! Originally posted on The Subeditor Tamil
More Cinema News