கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் விருது: ஐசிசி அறிவிப்பு!

by Sasitharan, Jan 28, 2021, 18:35 PM IST

மும்பை: ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும் கெளரவித்து விருதுகளை வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவிக்கையில், கிரிக்கெட் போட்டியில் அனைத்து விதத்திலும் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்படவுள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரர், வீராங்கனைகளுக்கு விருது கிடைக்க ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம்.

முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாடமியும் ரசிகர்களுடன் இதில் இணைந்து செயல்படும். விருதுக்கு தகுதியான நபர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு உரிய வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளனர். மாதத்தின் சிறந்த வீரர் விருது முதல் முறையாக வழங்கப்படவுள்ள நிலையில், அந்த விருதுக்காக இந்திய வீரா்களான ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வீரர்கள் ரிஷப் பந்த், முகமது சிராஜ், நடராஜன் ஆகியோரின் பெயா்கள் பரிசீலனையில் உள்ளது. சமீபத்தில் நடத்து முடிந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அவா்கள் பெயா்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைபோல், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குா்பாஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் மாரிஸானே காப், நாடினே டி கிளெர்க் ஆகியோரின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

You'r reading கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் விருது: ஐசிசி அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை