இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 50% ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி!

by Sasitharan, Feb 1, 2021, 18:52 PM IST

சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியை காண பொதுமக்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும், அதற்கு பின்னர், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 2-வது போட்டி சொன்னையில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலும் நடைபெறுகிறது.

இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் டி20 போட்டி நடைபெற்றது போல, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளை கண்டு மகிழ 50 சதவித ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. மேலும், ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

You'r reading இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 50% ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி! Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை