ஆவடியில் பொது இடத்தில் தாக்கிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள்

Traffic policeArguments public places

Oct 18, 2018, 17:50 PM IST

சென்னை அடுத்து ஆவடியில் பொதுஇடத்தில், போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Fight Cartoon

சென்னை ஆவடியை சேர்ந்த அண்ணாதுரை, போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக இருக்கிறார். நேற்று கோயம்பேடு பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

பின்னர் பணி முடிந்து வெகுநேரமாகியும் அவரை மாற்ற வேண்டிய மற்றொரு தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவர் மிகவும் கால தாமதமாக பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அண்ணாதுரை கேட்டதால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் ஒருவரை ஒருவர் பொது இடத்தில் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உடனடியாக உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

You'r reading ஆவடியில் பொது இடத்தில் தாக்கிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை