திருச்சியில் மான்கள் உயிரிழப்பு பூங்கா மூடப்பட்டது

திருச்சி பாரத மிகு மின் நிறுவன (BHEL) பூங்காவில் 31 புள்ளிமான்கள் செரிமான கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளன.

இது பற்றி கூறப்படுவதாவது:
பாரத் மிகு மின் நிறுவனத்தில் உள்ள பூங்காவில் மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 200 மான்கள் இங்கு வசித்து வந்தன. கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 1) இந்தப் பூங்காவில் உள்ள 20 புள்ளிமான்கள் மயக்கமடைந்து பின் உயிரிழந்தன. பின்னர் 11 மான்கள் அதேபோன்று உயிரிழந்தன.

மொத்தமாக மான்கள் உயிரிழந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். இறந்த மான்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டன. அதில் செரிமான கோளாறு காரணமாக ஏற்பட்ட நோய்தொற்றின் காரணமாக மான்கள் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

வழக்கமாக இந்தப் பூங்காவில் மான்களுக்கு வேப்பிலையும் புல்லும் உணவாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு வாரங்களாக அவற்றின் உணவு மாற்றப்பட்டு சௌண்டல் என்னும் சூபா புல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு ஒத்துக்கொள்ளாமல் செரிமான கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எஞ்சியிருக்கும் மான்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருப்பதால் திருச்சி பாரத் மிகுமின் நிலைய பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது. நான்கு கால்நடை மருத்துவர்களை கொண்ட குழு மான்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது மிளகு மற்றும் உப்பு கலந்த கரைசல் மான்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. சூபா புல்லை அளவுக்கு அதிகமாக உண்ட மான்களை கண்டறிந்து உரிய மாற்று சிகிச்சை அளிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

மான்களின் பராமரிப்புக்கென்று நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், அருகிலிருந்த சூபா புல்லை மான்கள் விரும்பி சாப்பிடுவதை கண்டு அதை கொடுத்துள்ளனர். பராமரிப்பு ஊழியர்களின் அறியாமையே புள்ளிமான்களின் உயிருக்கு எமனாக அமைந்து விட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
chennai-businesswoman-reeta-lankalingam-commits-suicide
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?
Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters
சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது
Tag Clouds